இன்று தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது…

இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் இன்று தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பணிகள் நடைப்பெற்று வருவதால், இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முழு பணி நாளாக அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த பணியை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 16ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுமுகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, இன்று 12.01.2024 (வெள்ளிக் கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஈடாக 16.01.2024 (செவ்வாய்க் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.