திருச்சி மாநகர அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக இப்ராம்ஷா தேர்வு…

திருச்சி மாநகர மாவட்ட மாணவரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சிந்தாமணி இப்ராம்ஷா அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். கட்சிப் பணியினை திறம்பட செய்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆலோசனைகளை வழங்கினார். தன்னை மாநகர மாவட்ட மாணவரணி செயலாளராக நியமித்த கட்சியின் பொதுச் செயலாளர் அவர்களுக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.