குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை..

கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 43)வியாபாரி.இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர் இவரது மனைவி ஆற்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை செல்ல வேண்டும் என்று நடராஜனிடம் அனுமதி கேட்டார் . அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் மனைவி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார்.அவரை வீட்டுக்கு வருமாறு நடராஜ் அழைத்தார். அதற்கு அவரது மனைவி மறுத்துவிட்டார் .இதனால் ஆத்திரமடைந்த நடராஜ் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.