2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து- தொழிலாளி பரிதாப பலி..

கோவை அருகே உள்ள பொங்காளியூர், பாலகணேசபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 57 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று வடவள்ளி- லிங்கனூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பழனியப்பா நகர் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும், இவரது பைக்கும் மோதிக் கொண்டன. இதில் ரங்கராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார் .இதுகுறித்து அவரது மனைவி செல்வி வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இது தொடர்பாக மற்றொரு பைக் ஓட்டி வந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.