திருமணமான ஒரே ஆண்டில் கணவர் விஷம் குடித்து தற்கொலை..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 30) இவரது மனைவி மஞ்சுளா( வயது 27) இவர்களுக்கு கடந்த ஓரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ் குமார் குடிபழக்கம் உடையவர் .குடித்துவிட்டு வருவதால் வீட்டில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மஞ்சுளா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த ரமேஷ் குமார் விஷம் குடித்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து தந்தை கோபால் ஆனைமலை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.