14- வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஓட்டல் சர்வருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை: திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34) இவர் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் தங்கி இருந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது .இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரபபில் வழக்கறிஞர் ரசிதா ஆஜரானார்.