இன்று 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட மழையின் காரணமாக தமிழகத்தில் நேற்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

புயல் கரையை கடந்து விட்டாலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் இன்றைக்கு 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ,கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பத்தூர், சேலம், நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால் அண்ணா பல்கலையில் இன்றைக்கு தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகளில் இன்று நடக்க இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.