நகை கடையில் பங்கு தருவதாக மாமாவிடம் ரூ.40 லட்சம் மோசடி – மருமகன் கைது..!

கோவை செல்வபுரம்,பேரூர் மெயின் ரோட்டில் உள்ள குமாரபாளையத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கோவிந்தன் (வயது 83 ) இவர் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை செல்வபுரத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் அவரது தங்கை மகன் ஸ்ரீகாந்த் (வயது 45) என்பவர் கோவையில் நகைக்கடை தொடங்க இருப்பதாகவும் அதில் மாமா கோவிந்தனை பங்குதாரராக சேர்ப்பதாகவும் கூறினார். இதை நம்பி கோவிந்தன் அவரிடம் ரூ40 லட்சம் பணத்தை கொடுத்தார்.அவர் கூறியபடி ஸ்ரீகாந்த் நகைக்கடை திறக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. மோசடி செய்துவிட்டார். இது குறித்து கோவிந்தன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து மருமகன் ஸ்ரீகாந்தை நேற்று கைது செய்தனர்.