கோவையில் பப்புவா நியூ கினியா நாட்டு ஆளுநர் முதலீட்டாளர்களுடன் இன்று ஆலோசனை.!

கோவை : பப்புவா நியூ கினியா நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாநில கவர்னர், சசிந்திரன் முத்துவேல் நேற்று இரவு கோவை வந்தார் .அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.இன்று காலையில் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதில் கோவையில் உள்ள முத்துஸ் மருத்துவமனை சேர்மன் டாக்டர் முத்து சரவணகுமார். கோவை பாபா காம்ப்ளக்ஸ் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஏராளமான தொழிலதிபர்கள்,வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்றனர்.பின்னர் சாய்பாபா காலனியில் உள்ள லெசிஸ் பள்ளிக்கூட 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அவருக்கு லெஸ்சி பள்ளிக்கூட முதல்வர் ,மற்றும் அந்த பள்ளியின் முன்னாள் மாணவரும், பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய தூதருமான டாக்டர். விஷ்ணுபிரபு ஆகியோர் பூக்கொத்து ,சால்வை அணிவித்து வரவேற்றனர்.