ரூ1.18 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி- கோவை தம்பதி கைது..!

கோவை செட்டி வீதி சாவித்திரி நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53) பெரிய கடை வீதியில் நகை கடை நடத்தி வருகிறார்.இவர் செல்வபுரம், அசோக் நகரை சேர்ந்த ( தீபக் வயது 32 )அவரது மனைவி வர்ஷினி (வயது 37 )ஆகியோரிடம் 20.51. 444 கிராம் தங்கத்தை நகை செய்து கொடுக்குமாறு கொடுத்திருந்தார் . இந்த தங்கத்தை இருவரும் நகை செய்து கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர்.இதன் மதிப்பு ரூ. 1 கோடியே 18 லட்சம் இருக்கும். இது குறித்து பாஸ்கர் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா ,சப் இன்ஸ்பெக்டர் செல்வி பாமா ஆகியோர் வழக்கு பதிவ செய்து தீபக், வர்ஷினி, ஆகியோரை  கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது..