மாணவர்களுக்கு சான்றிதழ் உடனே கொடுங்க… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!

மிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.