ஆட்டோ, பைக்கில் கஞ்சா கடத்தல் – 2 பேர் கைது.!!

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று இடையர்பாளையம் மணிகண்டன் நகர் ஐயப்பன் கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்டோ ஓட்டி வந்த குனியமுத்தூர் பாரதி நகரை சேர்ந்த சந்தோஷ் (வயது 31) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கஞ்சா செல்போன் ஆட்டோ, ரூ.3560 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஞான பிரகாஷ் மாச்சம்பாளையம் கல்லுக்குழி ,வீதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 700 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கும், கஞ்சாவும், ரூ 3, 500 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..