ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் பறிப்பு – 3 திருநங்கைகள் கைது.!!

கோவை : திருப்பூர் மாவட்டம் கணியூர் பக்கம் உள்ள அரியநாச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது) 40 இவர் சரவணம்பட்டி, துடியலூர் ரோட்டில் உள்ள இ கே. ஜி நகரில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.நேற்று அங்குள்ள ரோட்டில் ராஜகோபால் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே 2 திருநங்கைகள் நின்று கொண்டிருந்தனர். 3 பேரும் சேர்ந்து ராஜகோபாலை மிரட்டி அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் . இது குறித்து ராஜகோபால் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் மந்திரியப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் அனுசியா (வயது 23) கார்த்திகா ( வயது 28) சாய் சமித்தா ஆகியோரை கைது செய்தனர்.