கோடநாடு கொலை வழக்கு… சந்தோஷ்சாமி சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜர்.!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17 ஆம் ஆண்டு கொலை – கொள்ளை நடந்தது .இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சயான் ,வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி உட்பட 11 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பலரை விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 300 க்கு மேற்பட்டவரிடம் பல்சர் விசாரணை நடத்தி உள்ளனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் சாமியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு சி.பி.சி. ஐ.டி அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது . இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக சந்தோஷ் சாமி நேற்று மதியம் 12 மணிக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சி.பிசிஐ.டி அலுவலகத்திற்கு வந்தார் .பின்னர் அவரை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.