கோவையில் கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!!!

கோவையில் கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!!!

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் மலுமிச்சம்பட்டி to போடிபாளையம் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரா சாஹூ மகன் பிரியரஞ்சன் சாஹூ (26)-யை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் -1 ஆகியவற்றை பறிமுதல் செய்தும், இதே போல் சூலூர் காவல் நிலைய காவல் துறையினர் காடம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்புவன் ஷஹானி மகன் ராஜபாபு சஹானி (30) மற்றும் விதேஷ்வர்சஹா மகன் விஜய்சஹானி (31) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தும் மேற்படி இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய மேற்படி நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது போன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ் – அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப் போரின் ரகசியங்கள் காக்கப்படும்.