கணவனை கொலை செய்த வழக்கு: மனைவி, கள்ளக் காதலன் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை – ரூ.6000/- அபராதம் விதித்து தீர்ப்பு…

கணவனை கொலை செய்த வழக்கு: மனைவி, கள்ளக் காதலன் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை – ரூ.6000/- அபராதம் விதித்து தீர்ப்பு…

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசித்த அமுதா (36) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (32) ஆகியோர் இருவரும் அவர்களது திருமணம் கடந்த உறவுக்கு இடையூறாக இருந்த அமுதாவின் கணவரான நாகராஜ் (35) என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு மேற்படி இருவரும் கொலை செய்த குற்றத்திற்காக மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் 1-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று (29.04.2024) முடிவு பெற்று கொலை குற்றவாளிகளான அமுதா (36) மற்றும் சங்கர் (32) ஆகியோர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.6000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமைக் காவலர் ஆனந்தகுமார் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.