கோவையில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

கோவை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி ,அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வானமா மலை. இவரது மகன் முத்தையா ( வயது 33) இவர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் முன் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சூலூர், நாங்குநேரி, பல்லடம் ஆகிய இடங்களில் பல வழக்குகள் உள்ளன இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். இதன் பேரில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவு பிறப்பித்தார். வடவள்ளி போலீசார் இவரை நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு வழங்கினார்கள்.