கோவை அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் செயின் பறிப்பு..!

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், ஆனந்தா நகரை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி உஷாராணி (வயது 55) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சரவணம்பட்டி,ஜனதா நகர் – சக்தி நகர் ரோட்டில் உள்ள ” பிளையிங் பட்டர்பிளை ” ஸ்கூல் அருகே நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து உஷாராணி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.