சூலூர் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்- 6 பேர் கைது..!

கோவை சூலூர் பக்கம் உள்ள குளத்தூர், அச்சன்குளம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சூலூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் போலீசாருடன் சென்று திடீர் சோதனை நடத்தினார். அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாககுளத்தூர் பிரபு (வயது 33) சின்னியம்பாளையம் கவின் (வயது 23) தொட்டிபாளையம் சுரேஷ் பாபு ( வயது 42) குளத்தூர் பொன்ராஜ் ( வயது 35 )இருகூர் கண்ணன் ( வயது 23) வெங்கிட்டபுரம் நடராஜ் (வயது 49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்படுத்தப்பட்ட 2 சேவல்களும், ரூ.200 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் விசாரணை நடந்து வருகிறது..