பைக்கில் உயர்ரக போதை பொருள் கடத்தல் .பெண் உட்பட 2 பேர் கைது.

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர்நேற்று மாலை ஆவாரம்பாளையம் மேம்பாலம் ரயில்வே கேட்அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது பைக்கில் வந்த இருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில்சோதனை செய்தனர் அவர்களிடம் 2.300 கிராம் “மித்தம் பிட்டமைன்”என்ற உயர்ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போதை பொருளும்,செல்போனும் ,எலக்ட்ரிக் எடை போடும் இயந்திரமும்,பறிமுதல் செய்யப்பட்டது இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ஆவாரம்பாளையம் கிழக்கு வீதியைச் சேர்ந்த ஜெயகணேஷ் மகன் பிரதீப் (வயது 25) பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம்,அய்யாசாமி லே அவுட்டை சேர்ந்த
கோபாலகிருஷ்ணன் மகள் ஷாலினி (வயது 24) என்பதும் தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.