கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!!

கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் வால்பாறையில் கோடை விழா நடத்துவதற்கான ஆணையை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து பேசிய நகர் மன்ற உறுப்பினர்கள் முதல் வேண்டுகோளாக 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற இருக்கின்ற கோடை விழாவின் போது 26, 27 ஆகிய இரண்டு தினங்கள் மதியம் 2 மணிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கவும் இறுதி நாளான 28 ஆம் தேதி தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளித்து அனைவரும் விழாவில் கலந்து கொள்ள வழி வகை செய்ய வேண்டும் என்றும் நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி வலியுறுத்தினார்,

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகளால் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளை தீர்க்க விரைவில் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்றும் தற்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வால்பாறை பகுதிக்கு வந்து செல்லும் நிலையில் நகர் பகுதியில் போதிய கழிப்பிடம் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் குறிப்பாக பெண்கள் அதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் அதை தீர்க்க மார்க்கெட் பகுதியில் உள்ள கழிப்பறையை விரைவில் திறந்து விடவும் வலியுறுத்தப்பட்டது,

ஒன்பதாவது வார்டு பகுதியில் போதிய பணிகள் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இதே நிலை தொடரும் பட்சத்தில் வார்டு பகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஒன்பதாவது வார்டு நகரமன்ற உறுப்பினர் மகுடீஸ்வரன் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து 12 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன் பேசம் போது வால்பாறை பகுதியில் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு நகராட்சி திருமண மண்டபத்தை இலவசமாக வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், 19 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரையிலும் எந்த ஒரு பணியும் செய்யாமல் அப்பகுதியில் சம்பந்தப்பட்ட யாரும் எந்த வித ஆய்வும் மேற்கொள்ளாமல் முழுமையாக புறக்கணிப்பு செய்யப்படுவதாகவும் இனி மேலும் அதே நிலை நீடிக்காமல் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வேண்டிய பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் 19 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பால்சாமி கேட்டுக் கொண்டார்.

நகர்மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் அனைவரின் வேண்டுகோள்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் அதேபோல வருகிற 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற இருக்கும் கோடை விழா சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கூட்டத்தை நிறைவு செய்தார் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.