இனி வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை – இங்கிலாந்தில் புதிய திட்டம் அமல்..!

லக நாடுகள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது.

இதற்கு சுமார் 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சோதனை தொடங்கப்பட்டது.

அதில், சுமார் 2,900 பணியாளர்கள் கலந்துகொண்டு சராசரியாக 4 நாட்களில் 34 மணி நேரம் வேலை பார்த்துள்ளனர். இதனால், இங்கிலாந்து நாட்டில் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்க்கும் திட்டத்தை பெரும்பாலான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்று கொண்டுள்ளனர்.

அதன் படி, இங்கிலாந்து நாட்டில் வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை திட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த திட்டம் மூலம் சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை சம நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் தொடர்பாக சிட்டிசன்ஸ் அட்வைஸ் கேட்ஸ்ஹெட்டின் தலைமை அதிகாரி பால் ஆலிவர் தெரிவித்துள்ளதாவது, “இந்த திட்டத்தால் வேலை தக்க வைத்தல் மற்றும் ஆள் சேர்ப்பு மேம்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை ஊழியர்கள் செய்து வருகிறார்கள்” என்றுத் தெரிவித்துள்ளனர்