13ம் தேதி முதல் வாரிசு, துணிவு… அதிகாலை காட்சிகள் ரத்து… தமிழக அரசு உத்தரவு- தல, தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி.!!

தேவராஜன் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் வாரிசு துணிவு படங்களுக்கான சிறப்பு காட்சிகள் காலை நான்கு மணி, ஐந்து மணிக்கு திரையிடப்படுகின்றது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

புகார் மனுவின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவானது அனுப்பப்பட்டுள்ளது. அதில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு நான்கு மணி, ஐந்து மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

13, 14, 15,16 ஆகிய நான்கு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் அரசு சார்பில் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திரையரங்க வாசலில் பெரிய பெரிய கட்டவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது போன்றறை செய்யக்கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.