பைனான்ஸ் நிறுவனத்தில் ரு 3.99 லட்சம் மோசடி – ஊழியர் மீது புகார்..!

பைனான்ஸ் நிறுவனத்தில் ரு 3.99 லட்சம் மோசடி – ஊழியர் மீது புகார்..! கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது இங்குசெட்டிபாளை யத்தைச் சேர்ந்த அருண் ( வயது 33) என்பவர் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். இவர் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த 3 லட்சத்து 99 ஆயிரத்து 253 ரூபாயை நிறுவனத்துக்கு கட்டாமல் மோசடி செய்து விட்டாராம். இது குறித்து அந்த நிறுவனத்தின் உதவி மேனேஜர் நடராஜன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண் மீது மோசடி உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.,