வீட்டில் சேவல் சண்டை சூதாட்டம் – 8 பேர் கைது..!

கோவை போத்தனூர் அருகில் உள்ள செட்டிபாளையம் ,பிரைட் முல்லை நகரில் வசிப்பவர் சக்தி குமார் (வயது 43) இவரது வீட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சக்தி குமார் ( வயது 43) இடையர்பாளையம் கார்த்திக் (வயது 37) சுந்தராபுரம் விக்னேஷ் ( வயது 27) இடையர்பாளையம் குணசேகர் ( வயது 32) மோகன் ராஜ் (வயது 20) வெள்ளலூர் இளமுருகன் ( வயது 37 )கஞ்சி  கோணாம்பாளையம் ரவிச்சந்திரன் (வயத25) சிவக்குமார் (வயது37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .11 சேவல்களும் 12 இருசக்கர வாகனங்களும், பணமும்,ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது..