பெண்ணின் உடலுக்குள் உயிருடன் ஊடுருவிய ஈக்கள்: வெறும் 15 நிமிடங்களில் அகற்றி டெல்லி மருத்துவர்கள் சாதனை.!!

அமெரிக்காவில் பெண் ஒருவரின் உடலுக்குள் உயிருடன் இருந்த நிலையில் இருந்த மூன்று நுழைந்துள்ளது, அதனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான சுற்றுலா பயணி ஒருவர் இந்தியா வந்ததாக சொல்லப்படுகிறது. இதுல் அவருக்கு கடந்த ஒன்றரை மாதமாக வலது கண்ணீல் இமை வீக்கம், அடிக்கடி சிவந்து போதல், அதனுடன் அரிப்புத்தன்மை போன்றவை காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவர் இந்தியா வருவதற்கு முன்னதாக அமெரிக்காவில் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து பார்த்ததாகக்வும், இருப்பினும் இவை எந்த வகையாக அறிகுறிகளால் ஏற்படுகின்றன என்பதனை பற்றி ஏதும் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையில் நோயின் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

இந்தியா வந்த பின்னும் அவருக்கு கண் இமைக்குள் அவ்வபோது ஏதோ அசைவது போன்ற உணர்வு ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அவ்வப்போது அவர் அமேசான் காடுகளுக்கு சென்று வந்த பின் இருந்தே கடந்த 6 வாரங்களாக இந்த உணர்வானது இருந்து வருவதாக மருத்துவர்களிடம் சம்மந்தப்பட்ட பெண் கூறியுள்ளார். இதனையெல்லாம் வைத்துகொண்டு அவரை மேலும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கண்ணில் அரிதான மியாசிஸ் எனப்படும், மனிதர்கள், பிற பாலூட்டிகளில் பரவும் ஒட்டுண்ணி வகையை சேர்ந்த பெரிய அமெரிக்க ஈக்கள் இருப்பதனை உறுதி செய்தனர்.

அவர் அமேசான் காடுகளுக்கு சென்ற போது இந்த ஈக்கள உயிருடன் அவருடைய தோலை ஊடுருவி உள்ளே சென்றுள்ளன. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு எவ்விதமான மயக்க மருந்தினையும் செலுத்தாமல் 10-15 நிமிடங்களில் அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வலது மேல் கண்ணிமை கழுத்தின் பின்புறமாகவும் மற்றும் வலது முன்கை ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய 2 செமீ நீளம் அளவுள்ள மூன்று ஈக்களை அகற்றியுள்ளனர்.

மேலும் இந்த ஈக்களை அகற்றாமல் விட்டு விட்டால் நாளடைவில் திசுக்களில் கணிசமான அழிவை ஏற்படுத்தியிருக்கும். இதன் விளைவாக மூக்கு, முகத்தை சுற்றிய பகுதிகளில் அரிப்பு போன்றவை ஏற்படும். சில நேரங்களில் இது மூளைக்காய்ச்சல், மரணத்திற்கு வழிவகுக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.