சூலூரில் காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு.!!

நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்களின் வாக்குகளை செலுத்துவதற்காக சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், கருமத்தம்பட்டி துணை சூப்பிரண்டு தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன், மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி, கருமத்தம்பட்டி ஆய்வாளர் சண்முகவேலு உள்ளிட்ட அதிகாரிகளுடன் துணை பாதுகாப்பு படையினர் 300 பேரும் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் 50 பேரும் நிலைய காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர் கலந்து கொண்டு அணி வகுப்பினை நடத்தினர்.