கோவையில் ஆவணங்களை வாங்கி வைத்து கொண்டு அதிக வட்டி வாங்கிய பைனான்ஸ் அதிபர் கைது..!!

கோவை பேரூர் அருகே உள்ள காளம் பாளையம், கோபாலபுரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 51) பைனான்ஸ் அதிபர். இவர் பணம் நிறப்பாத காசோலை பெற்று
பலரிடம் அதிக வட்டி வாங்கினாராம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு வழக்கு பதிவு விசாரணை நடத்தினார். இதில் ஆவணங்களை வாங்கிக் கொண்டு மோசடியாக அதிக வட்டிக்கு பணம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து பைனான்ஸ் அதிபர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து தேதி நிரப்பாத 6 செக்குகள் ,சீட்டு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.மேலும் விசாரணை நடந்து வருகிறது.