உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்…குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்க… என கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டர்- பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது.

அவர் அந்த வீடியோவில் ‘ நான் தவறு செய்தால் கூட விட்டு விடுவேன். ஆனால் படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் என பேசியுள்ளார். அப்பகுதியில் படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறி நூதனப் பிரச்சாரத்தை மேற்கொண்ட போலீசார் பெண்ணா லூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவனாகும்.