இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல் இதோ – ஆர்.பி.ஐ சொன்ன முக்கிய தகவல்..!

ரிசர்வ் வங்கி அளித்துள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல் இதோ..

மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். ஓய்வு காலத்தில் இந்தப் பணம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதைச் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் வங்கியே மூழ்கிவிடும். அப்போது பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரின் கைகளில் தலையில் அடிக்க்துக்கொண்டு அழுவதைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே உங்கள் பணத்தை யாரிடமாவது ஒப்படைக்கும் முன், அந்த வங்கி பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரி பார்ப்பது நல்லதல்லவா?

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகள் (D-SIBs) 2022 என்ற பட்டியலை வெளியிட்டது. இதில், நம்நாட்டில் மிகவும் பாதுகாப்பான வங்கிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில் எந்த வங்கியில் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது, எந்த வங்கியில் உங்கள் பணம் பாதுகாப்பாக இல்லை என்று கூறியுள்ளது.. ஒரு நாட்டில் ஒரு பெரிய வங்கி தோல்வியடைந்தால், அதன் இழப்பு ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதன் வாடிக்கையாளர்களாக நீங்கள் பாதிக்கப்படுவது வேறு.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பாதுகாப்பான வங்கிகள் பட்டியலில் ஒரு அரசு மற்றும் 2 தனியார் வங்கிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், அரசுத் துறையின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி. இது தவிர, இரண்டு தனியார் துறை வங்கிகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் HDFC வங்கி மற்றும் ICICI வங்கியின் பெயர்கள் அடங்கும். உங்கள் கணக்கு SBIல் இல்லாவிட்டாலும், HDFC வங்கி அல்லது ICICI வங்கியில் இருந்தாலும், நீங்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க மாட்டீர்கள்.

இந்தப் பட்டியலில், வழக்கமான மூலதனப் பாதுகாப்பு இடையகத்துடன் கூடுதலாக பொது ஈக்விட்டி அடுக்கு 1 (CET1)ஐ பராமரிக்க வேண்டிய வங்கிகள் மட்டுமே உள்ளன. ரிசர்வ் வங்கியின் தகவல்படி, எஸ்பிஐ அதன் ரிஸ்க் எடையுள்ள சொத்துகளின் சதவீதமாக கூடுதலாக 0.6 சதவிகிதம் CET1 ஐ பராமரிக்க வேண்டும். இதே போல், ஐசிஐசிஐ வங்கியும், ஹெச்டிஎஃப்சி வங்கியும் கூடுதலாக 0.2 சதவிகிதத்தை பராமரிக்க வேண்டும். மேற்கண்ட வங்கிகளை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளின் அன்றாட செயல்பாடுகளை கண்காணிப்பது மட்டுமல்லாமல், எந்தவொரு பெரிய கடன் அல்லது கணக்கின் மீதும் கடுமையான கண்ணை பதித்திருக்கிறது. இது மட்டுமின்றி, வங்கிக் கடன் பற்றி ஏதேனும் பெரிய திட்டத்தில் முதலீடு பற்றி பேசினால், அதுவும் மதிப்பீடு செய்யப்படுகிறது. இது வங்கியின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் ஏதேனும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இத்தகைய வங்கிகளின் பட்டியலை 2015ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு இதுபோன்ற வங்கிகள் அவசியம் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. இந்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியும் ரேட்டிங் வழங்கியுள்ளது. இந்த மதிப்பீட்டிற்குப் பிறகு தான், இந்த முக்கியமான வங்கிகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை 3 வங்கிகளின் பெயர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..