போலி தங்கம் கொடுத்து ரூ.30 லட்சம் மோசடி – நண்பர் மீது போலீசில் புகார்.!!

கோவை கரும்புக்கடை ராஜூ நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 47) எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். குனியமுத்தூர் ,சோமாபுரி லே அவுட்டை சேர்ந்தவர் அம்ஜத் கார் ( வயது 40) கோல்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் கூட்டாக வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் கூட்டாக வியாபாரம் செய்வதற்கு அம்ஜ்கான் ,மன்சூர் அலியிடம் ரூ. 30 லட்சம் வாங்கி இருந்தார். 2 மாதம் கழித்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் லாபம் கொடுத்தார்.. பிறகு பணத்துக்கு பதிலாக 35 கிராம் தங்க கட்டி கொடுத்தார். அதை பரிசோதித்து பார்த்தபோது போலி தங்கம் என்பது தெரிய வந்தது. இது குறித்து பணத்தை கேட்ட போதும் கொடுக்கவில்லை. இது குறித்து மன்சூர் அலி கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் தங்கம் , அப்துல் கான் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.