கோவை கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பு – வாலிபர் கைது.!!

கோவை சவுரிபாளையம் ரோடு ஏரி மேடு, அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தரணிதரன் ( வயது 22 )ரேஸ்கோர் சில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று புலியகுளம் ஏரி மேடு சந்திப்பில் நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1 பவுன்தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து தரணிதரன் ராமநாதபுரம் போலீஸ்நிலையத்தில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்திரகாளி வழக்கு பதிவு செய்து நாகை மாவட்டம், வேதாரண்யம், மணக்காடு பகுதியைச் சேர்ந்த குமாரவேல் மகன் வேதமணி (வயது 21) என்பவரை கைது செய்தார் .நகை மீட்கப்பட்டது.