தொழிலாளிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு – 6 பேர் கைது.!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் ,குட்டை தோட்டம், பகுதியை சேர்ந்தவர் சின்ன கருப்பன் . இவரது மகன் குருசாமி (வயது 38) கூலி தொழிலாளி. இவர் நேற்று சாய்பாபா காலனி நாராயண குரு ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் இவரை வழி மறித்து அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ 2 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து குருசாமி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் அன்பு நகரை சேர்ந்த ரூபன் (வயது 18 ) எம். ஜி. ஆர் நகரை சேர்ந்த திருச் செல்வம் (வயது 24 )தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தாவின் பிரகாஷ் ( வயது 18) நல்லாம்பாளையம் சக்தி நகர் நவநீதகிருஷ்ணன் (வயது 19) பிரபு நகர் பரத்ராஜ் ( வயது 22) சக்தி நகர் தனுஷ் ( வயது 17)ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 அரிவாள், 2 இரு சக்கர வாகனங்கள், பணம் 320 பறிமுதல் செய்யப்பட்டது.