வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம்- கோவையில் உள்ள 56 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த முடிவு..!!

கோவை : வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில்முனை வோராக்கும் திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள 56 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷபி அகமது வெளியிட்டடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனை வோராக்கும் திட்டம் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் செயல்படுத்தப் பட உள்ளது.
இத்திட்டம் கோவை மாவட்டத்தில் உள்ள 56 கிராம ஊராட்சிகளிலும் செயல் படுத்தப்பட உள்ளது. அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 5 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 சதவீதம் மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோரின் வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணி புரியாதவராகவும் இருக்க வேண்டும்.

கணினி திறன் பெற்ற மற்றும் குடும்பத்துக்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதியுதவி பெற தகுதியுடையவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில்புரிவோரது நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாகவும், தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள்