கோவை பேரூர் பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கைது

கோவை பேரூர் பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கைது

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பேரூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல் துறையினர் பச்சாபாளையம் அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த பேரூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1.130 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.