வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் பணம் மோசடி .போலி டாக்டர் கைது.

கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி ஜேசு ராஜம்மாள்(வயது 50) இவரது மகன் உணவு விநியோகம் செய்யும் (சோமட்டோ) வேலை செய்து வருகிறார்..இவரது வீட்டுக்கு ஒருவர் சென்றார். தன்னை டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி யூ.பி.ஐ. மூலம் ரூ 70 ஆயிரத்து 760 வாங்கினாராம். அவர் வேலை எடுத்துக் கொடுக்கவில்லை .இதுகுறித்துஜேசு ராஜம்மாள் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தமபாளையத்தைசேர்ந்த மனோஜ் குமார் (வயது 30)என்பவரை கைது செய்தனர்.விசாரணையில் இவர்மருத்துவ விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துக் கொண்டு போலிடாக்டராக நடித்தது தெரிய வந்தது.