கல்லூரி மாணவரை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை. 3பேர் கைது .

கோவை போத்தனூர் காந்திஜி ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் பாஸ்கரன் ( வயது 20) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவரது அறையில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அறைக்குள் புகுந்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார் .இதனால் அவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த லேப்டாப், செல்போன்ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாஸ்கரன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்துகுறிச்சி, பாரதி நகரை சேர்ந்த ஹரி என்ற சரவணன் ( வயது 20 )சுந்தராபுரம் சாரதா மில் ரோடு சேர்ந்த யுகேந்திரன் ( வயது 20)குறிச்சி காந்திஜி ரோட்டை சேர்ந்த ரித்தீஷ் ( வயது 19) போத்தனூர் அன்பு நகரை சேர்ந்த தேவேந்திர குமார் என்ற குமார் (வயது 20) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் ஹரி என்ற சரவணன், தேவேந்திர குமார் ஆகியோர்மீது பல்வேறு திருட்டு வழிப்பறி வழக்குகள் உள்ளன.