கோவை கல்லூரி பேராசிரியையிடம் நகை பறித்த டிரைவர் கைது..!

கோவை வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வாசு இவரது மனைவி ஜெயா கவுரி ( வயது 44 )தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு நடந்து வந்தார் .அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒருவர் திடீரென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா கவுரி சத்தம் போட்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த ஆசாமியை கைது செய்தனர் .விசாரணையில் அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனரை சேர்ந்த அருண்குமார் ( வயது 25) என்பதும் கார் டிரைவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.