நடுரோட்டில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் – டிரைவர் கைது..!

கோவை ராமநாதபுரம் புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் காயத்ரி.இவர் நேற்று சுங்கம் காமராஜர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென்று காயத்ரி மீது பாய்ந்து கையை பிடித்து இழுத்தாராம் . இதை பார்த்த அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விக்னேஷ் (வயது 26) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த ஆசாமி யைகையும் களவுமாக பிடித்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் காந்திபுரம் 4 -வது வீதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 29)என்பது தெரிய வந்தது .இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.