புல்லட் பைக்கை குறி வைத்து திருடும் கொள்ளையன்..!

கோவையில் இருசக்கர வாகன திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக புல்லட் பைக்குகள் தான் அதிகம் திருட்டு போகிறது.’கொள்ளையர்கள் புல்லட் பைக்கை தான் குறி வைத்து திருடுகிறார்கள். கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி பிரிவு அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் ( வயது 31தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் அவரது புல்லட் பைக்கை தனது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.