20 லட்சம் பணம் மோசடி – திமுக பெண் கவுன்சிலர் தலைமறைவு ..!

சென்னை:20 லட்சம் பணமோசடி – திமுக பெண் கவுன்சிலருக்கு போலீசார் வலைவீச்சு.!

சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன். கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பணை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 152-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பாரதி மற்றும் அவரது தோழி வனிதா உள்ளிட்டோர் தனசேகரனிடம் இருந்து வட்டி தருவதாக கூறி ரூ.20 லட்சம் கடனாக வாங்கியுள்ளனர்.

ஆனால் அவர்கள் சொன்னபடி அசல் மற்றும் வட்டி தராததால் சந்தேகமடைந்த தனசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் படி போலீசார் விசாரணை நடத்தியதில் பெண் கவுன்சிலர் உள்பட இரண்டு பேரும் தனசேகரனிடம் இரண்டு மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாக எழுதி கொடுத்து விட்டு சென்றனர்.

இருப்பினும், அவர்கள் இதுவரைக்கும் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் தனசேகரன் நேற்று மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுன்சிலரைத் தேடி வருகின்றனர்.