நடத்தையில் சந்தேகம்… மனைவிக்கு கத்தி குத்து – கணவர் கைது..!

கோவை அருகே உள்ள பி.என்.புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சுஜித் குமார் (வயது 35) கட்டிட தொழிலாளி இவரது மனைவி அகிலா ( வயது 31) இவரது நடத்தையில் கணவர் சுஜித் குமார் சந்தேகப்பட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுஜித் குமார் கத்தியால் மனைவியை குத்தினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து சுஜித் குமாரை கைது செய்தார்.இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ,கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.