பேக்கிரி ஊழியரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு – 3 பேர் கைது..!

கோவை தொண்டாமுத்தூர் ரோடு நாகராஜபுரத்தை சேர்ந்தவர் பாப்புசிங் (வயது51) இவர் சிவானந்த காலனி பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து சிவானந்த காலனி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பணம் ரூ. 2200 ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இது குறித்து பாப்பு சிங் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து போத்தனூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கபிலி என்ற ஆகாஷ் , பிரேம் குமார் கருணாநிதி நகர் உதயா ஆகியோரை கைது செய்தார். கிறிஸ்ட்டோபர் என்பவர் தப்பி ஓடி விட்டார்.