கணவர், மாமியார் டார்ச்சரால் மனைவி தூக்கிட்டு தற்கொலை..

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள வள்ளலார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் மகேஸ்வரன், இவரது மனைவி சர்மிளாதேவி ( வயது 26) இவர்களுக்கு 10- 11- 20 21 அன்று திருமணம் நடந்தது.இவர் நேற்றுமுன் தினம் தேனி மாவட்டம்,பெரியகுளம் சில்வர் பட்டியல் வசிக்கும் தனது தாயார் சிவமணிக்கு போன் செய்து தனது கணவர் தனக்கு டார்ச்சர் செய்வதாக கூறினாராம்.இது தொடர்பாக அவரது கணவரிடம் கேட்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை.இந்த நிலையில் சிவமணி நேற்று ஒண்டிப்புதூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உட்பக்கமாக தாழ் போடபட்டு பூட்டி இருந்தது.கதவை உடைத்து பார்த்த போது அவரது மகள் மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவை கட்டி தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவரது தாயார் செல்வமணி சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார்.புகாரில் அவரது கணவர் மகேஸ்வரன், மாமியார், மாமனார் ஆகியோரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தனது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து உதவி போலீஸ் கமிஷனர் பார்த்திபன், சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.