கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை புலியகுளம், அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ் (வயது 30) இவர் கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக 22 -6-20 20 அன்று கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இன்றியமையாத  பொருட்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஞ்சா வியாபாரி அபி என்ற அபிலாஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ 1 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார்..