டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று கோவை வருகை..!

கோவை: தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவை வந்தார். காரில் சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமுக்கு சென்றார்.அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் திம்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தார். அதிரடிப்படை அதிகாரிகள் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தினார்கள்.இன்று மாலை காரில் கோவை வருகிறார்.கோவையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்..கோவையில் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு காவல்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது..