குறிச்சி கிறிஸ்தவ ஆலய காம்பவுன்ட் சுவர் இடிப்பு – 13 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை அருகே உள்ள குறிச்சியில் டி.இ. எல். சி கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலையத்தின் காம்பவுன்ட் சுவரை நேற்று ஒரு கும்பல் ஜேசிபி எந்திரத்தால் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதன் தலைவர் சார்லஸ் தேவநேசன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கமலேஸ்வரன், சலீம் பாட்ஷா ,நபிஷா உட்பட 13 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..