செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.25ம் தேதி வரை நீட்டிப்பு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகிற 25ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் அமலாக்கத்துறை வழக்கின் ஆசல் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்திய நிலையில் 34 ஆவது முறையாக காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். பண பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.