பிரதமர் மோடி ,யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சை பேச்சு: பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்.!!

பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. அதில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டம் பஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக செயல்பட்டு வந்தார்.

இவர் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டு உள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதனால் பள்ளி ஆசிரியர் அஜித் யாதவை மாவட்ட கல்வி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.