திருச்சியில் பிரம்மாண்ட சர்வதேச தரத்தில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள்- ஆட்சியர் ஆய்வு.!!

திருச்சி மாவட்டம் என்றாலே வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான முக்கொம்பு, மலைக்கோட்டை, கல்லணை போன்ற சுற்றுலா தளங்கள்தான் நம் நினைவுக்கு வரும்.
இதேபோல ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூா் நடுக்கரை கிராமத்தில், உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவும் பிரசித்தி பெற்றது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கரில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா தமிழக அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக இதை அறிவித்தாா். தற்போது இயற்கை அழகு மிகுந்த சுற்றுலாத் தலமாக இது மாறியுள்ளது.
இதேபோல பறவைகள் பூங்காவையும் காவிரிக் கரையில் ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் பூா்வாங்கப் பணிகளை கடந்தாண்டு மே மாதம் தொடங்கியது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடியில் (பொதுமக்கள் பங்களிப்புடன்) திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 1.63 ஹெக்டேரில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இரவு, பகலாக பணிகள் வேகமெடுத்துள்ளன.

இந்தப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியதாவது
இந்தப் பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டுப் பறவைகள், வீட்டு விலங்குகள் வளா்க்கப்பட உள்ளன. கூடுதலாக பறவைகள் இனப்பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டை தமிழா்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும்விதமாக அமைவிடங்கள், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இப் பூங்கா கட்டமைக்கப்படுகிறது. பறவைக் கூடம் ஒரு குவிமாடம் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இங்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்கும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா ஏற்படுத்தப்படுகிறது. உள்நாட்டுப் பறவையினங்கள் மற்றும் சீசன்தோறும் இடம்பெயரும் வெளிநாட்டு பறவையினங்களையும் ஈா்த்திடும் வகையில் இந்தப் பூங்கா கட்டமைக்கப்படவுள்ளது.பாா்வையாளா்கள் குழுக்களாக உலாவலாம். மரங்கள் மற்றும் சிறு நீரோடைகளுடன் தற்போதுள்ள பசுமையான சூழலுடன், பாதுகாப்பான சூழ்நிலையில் பறவைகளை வளா்ப்பதற்கு இயற்கையான சூழலை வழங்கவும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். முதியோா் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7டி திரையரங்கும் ஏற்படுத்தப்படுகிறது. மகளிா் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த இடம் நாள்தோறும் சுமாா் 10ஆயிரம் போ் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ளது. பறவைகள் பூங்கா அமைப்பதின் மூலம் சுற்றுலா வளா்ச்சி, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.இந்தப் பூங்கா சா்வதேச தரத்தில் இருக்கும். பொதுமக்கள் பறவகளைப் பாா்வையிட்டு புகைப்படம் எடுக்க கட்டணம் வசூலித்து அரசுக்கு வருவாய் ஈட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் ஓய்வு நேரத்தைக் கழிக்க பொதுமக்களுக்கு ஏற்ற போதிய இடங்கள் இல்லாததால், உள்ளூா் மக்களுக்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முறையான பொழுதுபோக்கு வசதியை உருவாக்கித் தரவுள்ளோம். பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா். திருச்சியில் பொழுதுபோக்கு மற்றொரு இடம் தயாராகி வருகிறது என்பதை அறிந்து எப்பொழுது திறக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.